>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 30 மார்ச், 2020

    இந்த கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்க மட்டுமே...!!

    கார்த்திகா : என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துக்குவேன்.
    சந்தோஷ் : சந்தோஷம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!
    கார்த்திகா : என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!
    சந்தோஷ் : 😂😂
    ------------------------------------------------------------
    பாபு : என் மனைவிக்கு கோபம் வந்தா அவ அம்மா வீட்டுக்கு போயிடுவா...
    ராம் : நீங்க என்ன பண்ணுவீங்க?...
    பாபு : கோபம் வர்ற மாதிரி ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன்... வாய்ப்புக்காக காத்திருக்காமல் வாய்ப்புகளை உருவாக்குபவனே திறமைசாலி...
    ராம் : 😳😳
    ------------------------------------------------------------
    காவலர் : யோவ்... இங்க வா... ஏன் சைக்கிளை இங்க படுக்க வெச்சிட்டு போற?...
    ராஜா : சார் இங்க சைக்கிள நிறுத்தக்கூடாதுன்னு போர்டு வெச்சுருக்கீங்களே... அதான் படுக்க வெச்சிட்டு போறேன்...
    காவலர் : 😩😩
    ------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
    துன்பத்துள் துப்பாயார் நட்பு.

    விளக்கம் :

    குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது. துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது.
    ------------------------------------------------------------
    விடுகதைகள் !!
    1. கொண்டையில பூ இருக்கு, வாடை இல்ல...
    கையத்தட்டுன்னா... கை.. வலிக்கல..
    கிண்டிவிட்ட வெள்ளாம வரலை - அது என்ன?

    2. அட்டைக்கு ஆயிரம் கண்ணு,
    முட்டைக்கு மூன்று கண்ணு - அது என்ன?

    விடைகள் :

    1. கொண்டை சேவல்.

    2. கட்டிலும், தேங்காயும்.
    நிதர்சனமான உண்மை...!!
    பல பேர் வசயடை பாத்து ஒதுக்கிச் சென்ற ஆடைகள்தான்...
    மற்ற வாடிக்கையாளர்களின் பார்வையில் புத்தாடை ஆகிறது...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக