செவ்வாய், 28 ஏப்ரல், 2020

4-ம் வீட்டில் செவ்வாய்; இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

அங்காரகன் என்பவர் இந்து தொன்மவியலில் கூறப்படும் நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் அதிபதி ஆவார். அங்காரகன் என்றால் சிவப்பு நிறத்தவன் என்று பொருள். இந்து தொன்மவியலின்படி, இவர் ஒரு போரின் கடவுளும் பிரம்மச்சாரியும் ஆவார்.

செவ்வாய் பூமாதேவியின் மகனாக கருதப்படுகின்றார். ஜோதிடத்தின் படி செவ்வாய் பகவான், மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

செவ்வாய் கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்திற்குரிய கிரகங்களின் நாட்களில் பரிகாரம் செய்வது சிறப்பு.

லக்னத்திற்கு 4-ம் இடத்தில் செவ்வாய் நின்றால் குடும்பத்தில் சந்தோஷமின்மை ஏற்படும்.

4ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

👉 நிலபுலன் சேர்க்கை குறைபடும்.

👉 உடல் ஆரோக்கியத்தில் இன்னல்கள் தோன்றி மறையும்.

👉 தன்னுடைய முயற்சியால் எதையும் சாதிக்க வல்லவர்கள்.

👉 உறவினர்களிடம் அடிக்கடி வாக்குவாதம் உண்டாகும்.

👉 தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

👉 இல்லற வசதி குறைவுபடும்.

👉 கல்வியில் மந்ததன்மை உண்டாகும்.

👉 அரசியலில் ஆதாயம் கொண்டவர்கள்.

👉 எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு உடையவர்கள்.

👉 வாகன விபத்துக்கள் ஏற்படலாம்.

👉 மனப்போராட்டங்கள் உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்