Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 30 ஏப்ரல், 2020

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்தால் 4% கமிஷன்.! அதிரடி அறிவிப்பு.! பெறுவது எப்படி?

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அருமையான சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மற்ற பிஎஸ்என்எல் எண்களை ரீசார்ஜ் செய்யும் நுகர்வோருக்கு 4சதவிகிதம் தள்ளுபடி அளிப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை மே 31-ம் தேதி வரை அணுக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக அறிவித்துள்ள இந்த சலுகை அப்னோ கி மடாட் சே ரீசார்ஜ் என்று அழைக்கப்படுகிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பிஎஸ்என்எல் பயனருக்கு மற்றொரு பிஎஸ்என்எல் எண்ணை நண்பராகவோ அல்லது குடும்பத்தினராகவோ ரீசார்ஜ் செய்ய உதவுகிறது. மேலும் குறிப்பிட்ட எண்ணை ரீசார்ஜ் செய்யும்போது,ரீசார்ஜ் நிகழ்த்தும் பிஎஸ்என்எல் பயனருக்கு நான்கு சதவீத தள்ளுபடி கிடைக்கும், இது கேஷ்பேக் ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக