>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 20 ஏப்ரல், 2020

    இது எப்படி இருக்கு? படிங்க... சிரிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிப்பதற்கான நேரம்...!
    ராமு : கண்ணு கோளாறு-ன்னு சொன்னியே கண் டாக்டர போய் பாத்தியா?
    சோமு : அவருக்கு நானே பரவால...
    ராமு : ஏன்டா?
    சோமு : கண்ணு தெரியலன்னு போனா அவரு டார்ச் அடிச்சு என் கண்ண பாக்குறாரு...
    ராமு : 😀😀
    ---------------------------------------------------------------------
    மனைவி : எல்லை தாண்டிய பயங்கரவாதம் அப்படினா என்னங்க?
    கணவன் : நீ என்மேல பூரிக்கட்டையை தூக்கி எறியும்போது அது தெருவுல போறவங்க மேலே படுதுல்ல அதான்..!
    மனைவி : 😐😐
    ---------------------------------------------------------------------
    ஆசிரியர் : உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்...
    மாணவன் : சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க...
    ஆசிரியர் : 😩😩
    ---------------------------------------------------------------------
    இது எப்படி இருக்கு?
    பாக்கு மரத்தில் பாக்கு இருக்கும்...
    தேக்கு மரத்தில் தேக்கு இருக்கும்...
    ஆனா பன மரத்தில் பணம் இருக்குமா?😎😎

    அமைதிக்கான நோபல் பரிசை ஆயிரம் பேர் வாங்கலாம்...
    ஆனா பொறுமைக்கான நோபல் பரிசுன்னா அது பெண்களிடம் சேலை விக்கிற சேல்ஸ்மேன் ஒருத்தருக்கே போகணும்..!😜😜

    ---------------------------------------------------------------------
    திரும்ப வராது..!
    👉 சொன்ன ஒரு சொல்..

    👉 விடுபட்ட அன்பு..

    👉 கடந்து போன வாழ்க்கை..

    👉 நழுவவிட்ட சந்தர்ப்பம்...

    ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது.
    ---------------------------------------------------------------------

    நிமிட கதை..!
    தெருவில் செல்போனை பார்த்துகொண்டு நடந்தவனை,🚶

    பக்கவாட்டில் யாரோ மோதியதில் தடுமாறி கீழே விழுந்தான்.

    கோபத்தில் அறிவில்லையா உனக்கு? எருமை மாதிரி மேல மோதுற என திட்டியபடி நிமிர்ந்து பார்த்தான்.🤷‍♂️

    அங்கே உண்மையில் எருமைதான் நின்றிருந்தது.🐃

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக