Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 28 மே, 2020

தெலுங்கானாவில் ஒரு ' சுர்ஜித் ' 120 அடி ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பொடிச்சன் பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பிக்‌ஷபதி. இவருடைய மைத்துனர் கோவர்தன். கோவர்தனின் மூன்று வயது மகன் சாய்வர்தன். இந்நிலையில் பிக்‌ஷபதி வீட்டிற்கு சிறுவனின் குடும்பத்தினர் சென்றுள்ளனர். நேற்று மாலை வீட்டிற்கு வெளியே சாய்வர்தன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் கால் தவறி விழுந்து விட்டான்.



அதில் தண்ணீர் வந்ததால் மற்ற இரண்டு ஆழ்துளை கிணறுகளையும் அப்படியே விட்டுவிட்டார். இந்த சூழலில் மூடப்படாமல் இருந்த 120 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் சாய்வர்தன் விழுந்துவிட்டான்.

இதுபற்றி தகவலறிந்து ஓடிவந்த உறவினர்கள் துளையின் அருகே பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் சிறுவன் 17 அடி ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. உடனே மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். இரவு முழுவதும் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் ஆழ்துளைக் கிணற்றுக்கு இணையாக 17 அடி ஆழத்திற்கும் மேலாக பள்ளம் தோண்டப்பட்டது. இதையடுத்து பக்கவாட்டில் துளையிட்டு இன்று அதிகாலை சிறுவனை மீட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக