Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 14 மே, 2020

வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ள... இப்படி இருங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

இது சிரிக்க மட்டுமே..!!

ராமு : ஏன் சோகமா இருக்க?
கோபு : ஆசையே துன்பத்துக்கு காரணமுன்னு இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்.
ராமு : அப்படி என்ன தெரிஞ்சுக்கிட்ட?
கோபு : என் மனைவியை ஆசைப்பட்டுதானே திருமணம் செஞ்சுக்கிட்டேன்.
ராமு : 😂😂
---------------------------------------------------------------------
பாபு : தேர்தல் நேரத்துல நாயா உழைச்சேன்னு தலைவர் மேடையில பேசுனது தப்பா போச்சு...
குமார் : ஏன் என்னாச்சு...?
பாபு : இப்பெல்லாம் கூட்டத்துல யாரும் தக்காளி, முட்டை வீசுறதில்லை... பிஸ்கெட்தான் வீசுறாங்க...
குமார் : 😬😬
---------------------------------------------------------------------
கற்றுக்கொள்...!!

புத்திசாலியாய் இரு...
முட்டாளாய் நடி...
வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ளலாம்...
வெற்றிக்கு வழி...
மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதுதான்
வெற்றிக்கு ஏற்ற வழியே தவிர...
பாதியில் விட்டு விட்டு ஓடுவது
வெற்றிக்கு வழி ஆகாது...
---------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!

🌟 விதையின் தன்மை விளைச்சலில் தெரியும்.
மனிதனின் மேன்மை அவன் செயல்பாட்டில் தெரியும்.

🌟 இன்பமோ, துன்பமோ சகித்துக்கொண்டு ரசித்து வாழ்ந்தால்,
நாம் வாழும் வாழ்க்கையும் அழகுதான்.

🌟 உன்னிடம் உள்ள பலம், பலவீனத்தை அறிந்துகொள்.
பலவீனத்தை பலமாக‌ மாற்று.
உன் வாழ்க்கை உன் கையில் இருக்கும்.
---------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

விளக்கம் :

இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக