>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 19 மே, 2020

    பூவில் பிறக்கும், நாவில் சுவைக்கும். அது என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    கலக்கலான ஜோக்ஸ்..!

    மனைவி : என்ன பாத்துக்கிட்டு இருக்கீங்க?
    கணவன் : ஒன்னுமில்ல.
    மனைவி : ஒன்னுமில்லையா? ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்-ஐ பாத்துக்கிட்டு இருக்கீங்க!
    கணவன் : இல்ல... எங்கயாவது எக்ஸ்பேரி டேட் போட்டுருக்கான்னு பாக்குறேன்...
    மனைவி : 😠😠
    -----------------------------------------------------------------------
    காயத்ரி : டாக்டர்.. தலையில் பேன் தொல்லை தாங்க முடியல.
    டாக்டர் : இந்த பேன் மருந்த தூங்க போகும்போது போடுங்க.
    காயத்ரி : பேன் எப்ப தூங்க போகுதுன்னு எனக்கு எப்படி டாக்டர் தெரியும்?
    டாக்டர் : 😩😩
    -----------------------------------------------------------------------
    பாபு : உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே, இந்த சோப்பைத்தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே?
    தீபக் : அப்படியெல்லாம் இல்லங்க... இது 'கரைஞ்சதும்" வேற புது சோப் வாங்கிடுவேன்.
    பாபு : 😬😬
    -----------------------------------------------------------------------
    பாபு : டாக்டர், நான் பஸ்-ல ஏறினவுடனேயே தூக்கம் தூக்கமா வருது டாக்டர்.
    டாக்டர் : வந்தா என்ன? உட்கார்ந்துக்கிட்டு கண்ணை மூடி தூங்க வேண்டியது தானே.
    பாபு : நான் தூங்கிட்டா பஸ்ஸை யாரு ஓட்டுறது.?
    டாக்டர் : 😳😳
    -----------------------------------------------------------------------
    சிந்தனை துளிகள்..!

    🌟 ஒரு மனிதனின் விடாமுயற்சியை கைவிடாமல் இருந்தால்தான், முயற்சி தன் வெகுமதியை முழுமையாக விடுவிக்கும்.

    🌟 தைரியம் வெற்றியை கொடுக்கிறது. பயம் மரணத்தை கொடுக்கிறது.
    -----------------------------------------------------------------------
    விடுகதைகள்..!

    1. கண்ணால் பார்க்கலாம், கையால் பிடிக்க முடியாது. அது என்ன?

    2. பூவில் பிறக்கும், நாவில் சுவைக்கும். அது என்ன?

    3. பச்சை குடத்திற்குள் இனிப்பான பானம். அது என்ன?

    பதில் :

    1. நிழல்.

    2. தேன்.

    3. இளநீர்.
    -----------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
    இன்னா உலகம் புகல்.

    விளக்கம் :

    அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக