>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 1 ஜூன், 2020

    எது எளிது?... எது கடினம்?... படிங்க... சிந்தியுங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்கலாம் வாங்க...!

    தந்தை : காதுக்கிட்ட வந்து முணுமுணுக்காதே... கெட்ட பழக்கம்... என்ன விஷயம்னு சத்தமா சொல்லு...
    மகன் : காபி குடிங்கன்னு அவர்கிட்ட சொல்லி தொலைக்க வேண்டாமாம். வீட்டுல பால் இல்லைன்னு அம்மா சொல்ல சொன்னாங்க...
    தந்தை : 😳😳
    ----------------------------------------------------------------------
    கண்ணன் : என்ன சார் நைட் வீட்ல ஒரே சத்தமா இருந்துச்சு?...
    கோபால் : வேற ஒன்னுமில்லைப்பா... என் பொண்டாட்டிய திட்டிக்கிட்டு இருந்தேன்..
    கண்ணன் : அவங்க தான் அம்மா வீட்டுக்கு போய் ரெண்டு நாள் ஆச்சே!
    கோபால் : அதனாலதான் தைரியமா சத்தம் போட்டு திட்டினேன்.
    கண்ணன் : 😩😩
    ----------------------------------------------------------------------
    படித்ததில் பிடித்தது...!!

    ஆமையை ரோட்டில் விட்டு அதன் வேகத்தை குறை கூறுவது நம் பழக்கம்...
    அதை நீரில் விட்டால் நம்மால் அதை பிடிக்க முடியுமா?
    இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எவனும் வல்லவனே...!!
    ----------------------------------------------------------------------
    ஹா... ஹா. இது சரிதானே...?

    சந்தோஷமா ஒரு பாட்டு கேட்கணும்னா கூட,
    கஷ்டப்பட்டு ஹெட்செட் சிக்கல எடுத்தாதான் முடியும்.
    அதுபோலதான் வாழ்க்கை...
    ----------------------------------------------------------------------
    கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம்...
    எதிர்காலத்தை நினைத்து கனவும் வேண்டாம்...
    இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள்...
    ----------------------------------------------------------------------
    எப்படி வாழ்வது சிறப்பு?

    இன்னாரை போல் வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதைவிட,
    நம்மை போல் வாழ வேண்டும் என்று பிறர் எண்ணும் அளவிற்கு
    நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு...!!
    ----------------------------------------------------------------------
    சிந்தனை துளிகள்....!

    💪 அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

    💪 செல்வம் பெருகப் பெருக ஆசை அதிகமாவது போல, அறிவு பெருகப் பெருக அதில் ஆர்வம் அதிகமாகும்.

    💪 மற்றவர்களின் தவறுகளை தீர்மானிப்பது எளிது. ஆனால் நமது தவறை உணர்வது கடினம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக