Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 1 ஜூலை, 2020

துணிச்சலான சிறுவன்

ஒரு ஊரில், சிறுவன் ஒருவன் மிகவும் சுட்டித்தனமாக இருந்தான். ஒரு நாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆபத்தான இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனுடைய தாத்தா, கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார்.

அவர்கள் வந்ததும், இந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது. அதனால் கீழேயே விளையாடுங்கள் என்று பயமுறுத்தினார். இதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டார்கள். ஆனால், சுட்டிப் பையன் சரி சரி என்று தலையை ஆட்டிவிட்டு, மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான்.

அவனது நண்பர்கள், ஏறாதே பேய் உன்னை அடித்துவிடும் என்று கத்தினார்கள். இந்த மரத்திலே பேய் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு அது நம்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா நம்மைப் பயமுறுத்தியிருக்கிறார் என்று கூறினான்.

அதற்கு மற்ற சிறுவர்கள், உன் தாத்தா சொன்னபோது சரி என்று சொன்னாய் அது ஏன்? என்று கேட்டனர். எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்த சரி என்றேன் என்று நண்பர்களிடம் கூறிக்கொண்டே மரத்தில் ஏறினான்.

நீதி :

தைரியத்துடன் இருத்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக