Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 8 ஜூலை, 2020

ஜூலை 9 முதல் பசுமை மண்டலத்தை தவிர மேற்கு வங்கத்தில் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்

புதிய கொரொனா தொற்று மாநிலத்தில் அதிகரிப்பதால், மேற்கு வங்காள (West Bengal Govt) அரசு ஜூலை 9 முதல் முழு மாநிலத்தின் கட்டுப்பாட்டு மண்டலம் மற்றும் இடையக மண்டலத்தில் கடுமையான ஊரடங்கு விதிக்கப் போகிறது. இது தவிர, வடக்கு 24 பார்கனைஸ் (North 24 Parganas) பகுதிகளிலும் 14நாட்கள் முழுமையாக ஊரடங்கை மாநில அரசு செயல்படுத்துகிறது. இந்த பகுதிகளில் தேவையான அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார். மேலும், போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படும். இப்போது மாநிலத்தில் உள்ள பசுமை மண்டலத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும். 

மருந்துக் கடைகள் திறந்தே இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் வாகனங்கள் சாலைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கவுர் கன்யா பகுதியில் இருந்து புறப்பட்ட பின்னர் இந்த இரண்டு நகரங்களில் ஏதேனும் ஒன்றில் அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மற்றும் இ-ரிக்‌ஷாக்களும் முற்றிலும் தடை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இருப்பினும், அவசரநிலைகளுக்கு சில நிலையான இடங்களில் மூன்று சக்கர ரிக்‌ஷாக்கள் கிடைக்கும். மாவட்ட தலைமையகத்தில் காலை 11 மணி வரை சந்தை திறந்திருக்கும். மால்டாவில் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்கின்றனர். இதுவரை 859 பேருக்கு அங்கு தொற்று பதிவாகியுள்ளன. இவர்களில் 331 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 524 பேர் குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மாவட்டத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த மாவட்டம் இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!