Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

கிருஷ்ணர் ஏன் வெண்ணெய் திருடினார் தெரியுமா?- ஜென்மாஷ்டமியின் வரலாறு இதோ

Krishna Jayanti 2020 Story: கிருஷ்ணர் ஏன் ...

கிருஷ்ணரின் பிறப்பு நடந்தது எப்படி?... கம்சனை ஏன் கொன்றான். கோகுலத்தில் ஏன் நண்பர்களுடன் வெண்ணெய் திருடினான். கிருஷ்ண புரிந்த லீலைகள் என்ன என்பதை இங்கு நாம் பார்ப்போம்....கிருஷ்ணரின் பிறப்பு நடந்தது எப்படி?... கம்சனை ஏன் கொன்றான். கோகுலத்தில் ஏன் நண்பர்களுடன் வெண்ணெய் திருடினான். கிருஷ்ண புரிந்த லீலைகள் என்ன என்பதை இங்கு நாம் பார்ப்போம்...

கிருஷ்ண ஜெயந்தி எப்போது?

கிருஷ்ண ஜெயந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஆடி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினம், ஆடி 27ம் தேதி (ஆகஸ்ட் 11) செவ்வாய்க் கிழமை காலை 7.55 மணிக்கு அஷ்டமி திதி தொடங்கி ஆடி 28ம் தேதி காலை 9.36 மணி வரை இருப்பதால், இந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண இரவில் அவதரித்தார் என்பதால் வடக்கில் இரவு நேரங்களில் கிருஷ்ணருக்கு அபிஷேக, ஆராதனை, பூஜை வழிபாடு செய்யப்படுவது வழக்கம். அதனால் ஆகஸ்ட் 11ம் தேதி இரவு பூஜையும், 12ம் தேதி கொண்டாட்டமும் இருக்கும்.
கிருஷ்ண அவதாரம் வரலாறு:

கிருஷ்ணர் கம்சனை அழிப்பதற்காகவும், மகாபாரதம் எனும் உன்னத காவியத்தில், நீதியை நிலை நாட்டுவதற்காகவும் அவதரித்தவர்.
பானாசுரன் மற்றும் நரகாசுரன் ஆகியோரின் பேச்சைக் கேட்டு மதுராவில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான் கம்சன். தன் தங்கையான தேவகிக்கும் வசுதேவர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். அதன் பின் ஒரு அசரீரி மூலம், “தேவகி - வசுதேவர் ஆகியோருக்கு பிறக்கும் 8வது குழந்தை மூலம் உன்னை கொல்வான், கம்சனே உன் கொடுங்கோல் ஆட்சி முடிவடையும்.” என எச்சரித்தது.

அதனால் அதிர்ந்து போன கம்சன் தங்கை என்றும் பாராமல் வசுதேவர் - தேவகியை சிறையில் அடைத்தான்.
அவர்களுக்கு பிறந்த 6 குழந்தைகளை கொன்றான். மஹாமாயா தேவியின் அருளால் தேவகியின் 7வது குழந்தையின் கருவை வசுதேவனின் மற்றொரு மனைவியான ரோகிணிக்கு மாற்றப்பட்டது. ரோகிணி பெற்றெடுத்த குழந்தைக்கு பலராமன் என பெயர் சூட்டப்பட்டது.
கம்சனை அழித்த கண்ணன்

இவர்களது 8வது குழந்தை பிறந்தது, இறைவனின் கட்டளைக்கு இனங்க கிருஷ்ணரை கோகுலத்தில் வாழ்ந்து வந்த நந்தகோபர் - யசோதையிடம் சேர்த்தார். அவர்களுக்கு பிறந்த துர்கா தேவியின் சொரூபமான பெண் குழந்தையை அங்கிருந்து தேவகியிடம் கொண்டு வந்து சேர்த்தார்.
தேவகிக்கு 8வது குழந்தை பிறந்ததை அறிந்த கம்சன் அங்கு வந்து அந்த பெண் குழந்தையை கொல்ல முயன்றான். அப்போது துர்கா தேவியின் வடிவெடுத்த அந்த பெண் குழந்தை. உன்னை கொல்லப்போகும் குழந்தை பிறந்துவிட்டது. அந்த குழந்தை கோகுலத்தில் இருக்கிறான் என எச்சரித்து சென்றார்.

அதன் பின் கிருஷ்ணன் தான் அந்த குழந்தை என அறிந்த கம்சன், குழந்தையை கொல்ல பல மாய சக்திகளை அனுப்பினான். ஆனால் பரந்தாமனை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்களை வைத்து பல லீலைகளை செய்து காண்பித்தார்.
இளைஞன் ஆனதும் மதுராவுக்கு வந்த கிருஷ்ணன், கம்சனை அழித்து அவனின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மக்களைக் காத்தருளினார்.
கிருஷ்ணன் ஏன் வெண்ணெய்யைத் திருடினார் ?

கோகுலத்தில் ஆயர்கள் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தனர். அவர்களின் முக்கியத் தொழில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தான்.
அப்படி இருக்க கம்சன் கொடுமையால் கோகுலத்தில் உற்பத்தி செய்யப்படும் பால், வெண்ணெய், தயிர் முதலானவை கம்சனுக்கு அளிக்க கட்டாயப்படுத்தினான்.

இதன் காரணமாக அதை உற்பத்தி செய்து வந்த கோபியர்களின் குழந்தைகளுக்கு கூட பால், வெண்ணெய் முதலானவை கிடைக்கவில்லை.
கிருஷ்ணர் கோகுலத்தின் செல்லக் குழந்தையாக இருந்ததால், அவர் வெண்ணெய்யைத் திருடி தான் உண்டதோடு, தன்னுடன் இருக்கும் நண்பர்களுக்கும் வெண்ணெய், தயிர், பால் ஆகியவற்றை பகிர்ந்து கொடுத்தார்.
அதன் காரணமாக கோகுலத்தில் இருந்த குழந்தைகள் உடல் வலிமை பெற்றதாக இன்னொரு கதை உள்ளது.
கொண்டாட்டம் :
கிருஷ்ணன் வெண்ணெய்யைத் திருடினான் என்ற குற்றச்சாட்டு தான் வைத்தான். ஆனால் அதன் மூலம் அவர்களுக்கு உடல் வலிமை கொடுத்ததோடு, அனைவரையும் ஒன்றுபடுத்தினான் என்று தான் சொல்ல வேண்டும்.
இன்று கூட கிருஷ்ணன் வெண்ணெய் திருடாமல் இருக்க வெண்ணெய் நிறைந்த பானைகளை கயிரால் மேலே தொங்க வைக்கப்பட்டிருந்ததை எடுக்க தன் நண்பர்களோடு ஒரு பிரமிடு போன்ற அமைப்பை ஏற்படுத்தி வெண்ணெய்யை எடுத்து தானும், அவனது நண்பர்களும் தின்றனர்.

அதை நினைவுபடுத்தும் விதமாக இன்றும் கிருஷ்ண ஜெயந்தி அன்று பல நகரங்களில் மனித பிரமிடு எழுப்பி, மேலே கட்டி வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் பானை எடுக்கும் நிகழ்வு மிக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்வின் போது பல இளைஞர்கள் ஒற்றுமையுடன், ஒன்று கூடி பிரமிடு எழுப்புவது வழக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக