Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது..!

சிட்லப்பக்கத்தில் வசித்து வருபவர் சரன் ராம் இவர் இன்ஜினியர். அதைப்போல பகுதியில் வசித்து வருபவர் மருத்துவப் பணியாளர் ஆலன் மற்றும் நட்சத்திர ஹோட்டல் ஊழியர் மனோஜ் ஆகிய 3 பேரும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வேலை இழந்துள்ளனர்.
இந்நிலையில் மிகவும் வசதியாக வாழ்ந்த இவர்களுக்கு வருமானம் இன்றி தவித்த நிலையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்தனர் இந்நிலையில் குரோம்பேட்டை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பகுதியில் வந்த மனோஜின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
மேலும் வாகனத்தின் சீட் கஞ்சா பார்சல்கள் இருந்ததை பார்த்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சரன் ராம் ஆகியோரின் வீடுகளில் இருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!