Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 14 செப்டம்பர், 2020

மேல் மாடியில ஆண்கள் மட்டும்தான் இருக்கணுமாம்... ஏன்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
-------------------------------------
தீபக் : மயிலே மயிலேன்னா இறகு போடாது... ஏன் தெரியுமா?
ராஜ் : தெரியலையே...!!
தீபக் : இறகு போட சொன்னாதான் போடும்... மயிலே மயிலேன்னு சொன்னா மட்டும் போதுமா?
ராஜ் : 😝😝
-------------------------------------
ராம் : பஸ் ஏறுவதற்கு எங்க நிக்கணும்?
சீனு : ம்ம்ம்ம்ம்... நடு ரோட்டுல நில்லுங்க...
ராம் : 😏😏
-------------------------------------
குட்டிக்கதை...!!
-------------------------------------
ராமு ஒரு நாள் ஆற்றங்கரைக்கு தன் மகனை அழைத்து சென்றார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்து அங்குள்ள பெரிய பெரிய கற்களை காண்பித்தார். இந்த பையை அந்த கற்களால் நிரப்பு என்றார். மகனும் கற்களால் நிரப்பி எடுத்து வந்தான். இதற்கு மேல் நிரப்ப முடியாது என்றான்.

அப்பா கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார். அதே பையில் போட்டுக் குலுக்கினார். அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின. ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களை போட இடம் இல்லை. இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா? என கேட்டான் மகன்.

தந்தை அங்கேயிருந்த மணலை அள்ளி பையில் போட்டார். பையை மேலும் குலுக்கினார். பெரிய கற்கள், கூழாங்கற்கள் இவற்றிற்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது. இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா? இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டான் மகன்.

வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை. வேலை, வீடு, வாகனம் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்கு சமமானவை. கேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.

முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடு. அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும். ஆனால், உன் சக்தியை அற்பமான விஷயங்களுக்காக செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.

-------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------
ஒரு காக்கா இன்னொரு காக்காக்கிட்ட ஒரு ரகசியம் சொல்லுச்சாம்... என்ன தெரியுமா?
.
.
.
.
.
.
.
கா கா கா கா கா கா கா...😂😂

ஒரு வண்ணத்துப்பூச்சி பறக்குது...
எதுக்கு?
.
.
.
.
.
.
அதோட இஷ்டம்... பறக்குது...😆😆

மேல் மாடியில ஆண்கள் மட்டும்தான் இருக்கணுமாம்... ஏன்?
.
.
.
.
.
ஏன்னா... அது மேல் (Male) மாடி...😬😬

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!