Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 நவம்பர், 2020

இதில் கவனம் தேவை, சின்ன தவறு கூட உங்கள் bank account-ஐ காலி செய்து விடும்!!

Card Data Theft

நாடு முழுவதும் அதிகரித்து வரும் ATM மோசடி குறித்து வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்புகிறது. சில சமயம் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு உங்களிடமே இருந்தாலும், உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிடும். 

ஏடிஎம் மோசடி சம்பவங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து பதிவாகின்றன. இது தொடர்பான 7 வகையான மோசடிகள் வெளிவந்துள்ளன. இவற்றின் விவரங்களைப் பார்க்கலாம்.

கார்ட் தரவு திருட்டு

மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஏடிஎம்களின் தரவை திருடுகிறார்கள். மோசடி நபர்கள்,  ஒரு தரவு திருட்டு சாதனத்தை கார்ட் ரீடர் ஸ்லாட்டில் வைக்கின்றனர். இதற்குப் பிறகு, வாடிக்கையாளர்களின் தரவு மோசடிகாரர்களை அடைகிறது. இதைப் போல, பல மோசடி நபர்கள் போலி கீ போர்டுகள் மூலமும் தரவைத் திருடுகிறார்கள்.

ஏடிஎம் கார்டு குளோனிங்

Description: Description: ATM Card cloningஇந்த நாட்களில் கார்ட் குளோனிங்கும் அதிகரித்து வருகிறது. மோசடி நபர்கள் வாடிக்கையாளர்களின் முழுமையான தகவல்களை ஏடிஎம் குளோனிங் மூலம் திருடி, நகல் அட்டையை உருவாக்கி கணக்கிலிருந்து தொடர்ந்து பணம் எடுக்கிறார்கள்.

வங்கி கணக்குகளின் பெயரில் மோசடி

மோசடி செய்பவர்கள் வங்கி கணக்குகளில் சோதனை என்ற பெயரில் ஏமாற்றுகிறார்கள். அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக் கணக்குகளை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். அவர்கள் ஏதேனும் குழப்பத்தைக் கண்டால் உடனடியாக வங்கியை அணுகி அதை சரி செய்ய வேண்டும்.

வேலை என்ற பெயரில் மோசடி

Description: Description: Fraud in the name of jobபல இணையதளங்கள் வேலைகள் என்ற பெயரில் மோசடி செய்கின்றன. வேலைக்கான தகவல்களைத் தருவதாக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர, எந்தவொரு போர்ட்டலிலும் பணம் செலுத்துவதற்கு முன்பு அந்த போர்ட்டல் பற்றிய தகவலை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

QR Code மூலம் மோசடி

Description: Description: Fraud through QR CodeQR அதாவது விரைவான மறுமொழி குறியீடு மூலமாகவும் மோசடி செய்யப்படுகிறது. மோசடி செய்பவர்கள் QR குறியீடுகளை மொபைல்களுக்கு அனுப்புகிறார்கள். அதன் மூலம் மோசடி செய்கிறார்கள். QR குறியீடு மொபைலுக்கு அனுப்பப்படுகிறது, அதைப் பெறுபவர் QR குறியீடு இணைப்பைக் கிளிக் செய்கிறார். பின்னர் மோசடி நபர்கள், அந்த மொபைல் தொலைபேசியின் QR குறியீட்டை ஸ்கேன் செய்து வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கிறார்கள்.

UPI மூலம் மோசடி

Description: Description: Fraud through UPIUPI மூலமாகவும் மோசடி செய்யப்படுகிறது. UPI மூலம், மோசடி நபர் ஒரு நபருக்கு டெபிட் இணைப்பை அனுப்புகிறார், அவர் அந்த இணைப்பைக் கிளிக் செய்து அவரது பின்னை உள்ளிடுகையில், பணம் அவரது கணக்கிலிருந்து கழிக்கப்படுகிறது. இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க அறியப்படாத எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம்.

Whatsapp call மூலம் மோசடி

வாட்ஸ்அப்பில் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அழைப்பவர் உங்களை ஏமாற்றக்கூடும். தனக்கு தேவையான வேலையை செய்தவுடன் மோசடி நபர் உங்கள் எண்ணை பிளாக் செய்யலாம். வாய்ஸ் கால் செய்பவர் தனது தந்திரத்தால் உங்கள் பணத்தை அபகரிக்க முடியும். ஆகையால் ஜாக்கிரதை தேவை!!

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக