Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

காமெடி சொல்ல நாங்க ரெடி... சிரிக்க நீங்க ரெடியா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
--------------------------------------------
ராமு : பொண்ணு கிளி மாதிரினு... தரகர் சொன்னாரு...
சோமு : அவ்ளோ நல்ல பொண்ணா?
ராமு : நீ வேற... சொன்னதையே சொல்லி கழுத்தறுக்குறா...
ராமு : 😅😅
--------------------------------------------
மேனேஜர் : வேலை கேட்டு அனுப்புற விண்ணப்பத்துல சிகரெட் புடிக்கிற போட்டோவை ஏன் ஒட்டியிருக்கீங்க?
விமல் : நீங்கதானே புகைப்படம் வேணும்னு கேட்டிருந்தீங்க...
மேனேஜர் : 😬😬
--------------------------------------------
ஷாப்பிங் சென்ற மனைவி.. Ok சொன்ன கணவன்...!!

ஒருவன் நண்பர்களுடன் கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தான்...

அவன் சாப்பிடும் டேபிளின் மேலிருந்த செல்போன் ஒலித்தது... 

எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு 'ஹலோ" சொன்னான்...

என்னங்க நான் ஷாப்பிங் வந்தேன்... ஒரு லட்ச ரூபாயில நகை பார்த்தேன்... எடுத்துக்கவா?

எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா...

அப்புறம் இருபதாயிரம் ரூபாயில பட்டு புடவை ஒன்னு எடுத்துக்கவா?

ஒன்னு போதுமா டார்லிங்... ரெண்டா எடுத்துக்கோ...

சரிங்க... உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்... எல்லாத்தையும் அதுலயே வாங்கிக்கவா?

Ok டார்லிங்... தாராளமா வாங்கிக்க... என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்...

சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் அனைவரும் அவனை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்...

என்னடா! உன் பொண்டாட்டி இவ்ளோ செலவு பண்ண... சரின்னு சொல்லிட்ட...

நீ அவங்க மேல அவ்ளோ அன்பா வெச்சிருக்க... கிரேட் மச்சி... என்றார்கள்...

ஆனால் அவனோ அருகே அமர்ந்து இருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தான்...

இந்த மொபைல் போன் யாரோடது?
--------------------------------------------
குறளும்... பொருளும்...!!
--------------------------------------------
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் 
நண்பென்னும் நாடாச் சிறப்பு

பொருள் : 

குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பம் உண்டாக்கும். அதுவே எல்லோரிடத்தும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
--------------------------------------------
இன்றைய கடி...!!
--------------------------------------------
ஏன்டா பூனைக்கு காது வழியா பால் குடுத்த...?
.
.
.
.
.
.
அது தான் வாயில்லா ஜீவனாச்சே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக