>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 6 ஜூன், 2022

    ரோலக்ஸ் vs டில்லி கதாபாத்திரத்தை 8 வருடங்களுக்கு முன்னரே கணித்த சூர்யா!

    'விக்ரம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வெறும் ஐந்து நிமிடங்களே திரையில் வரும் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் இரக்கமற்ற வில்லனாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்து சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியுள்ளார்.

    அன்பான ஹீரோ என்று அழைக்கப்படும் சூர்யா, '24' படத்தில் ஆத்ரேயா என்கிற நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார், ஆனால் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை பொருத்தவரை சூர்யாவின் வில்லத்தனம் வேறு லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். 

    மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம் 3’ படத்தில் சூர்யா நடிப்பார் என்பதை கமல் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார். 

    கமலின் ‘விக்ரம்’, கார்த்தியின் 'டில்லி', ஃபஹத் ஃபாசிலின் 'அமர்' ஆகிய கதாபாத்திரங்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தியதில் சூர்யா தான் முக்கியமான வில்லனாக இருந்திருக்கிறார் என்பதை இந்த ‘விக்ரம்’ படம் தெளிவுபடுத்தியுள்ளது.

    இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தனது தம்பி கார்த்திக்கு வில்லனாக நடிப்பேன் என்று சூர்யா எட்டு வருடங்களுக்கு முன்பே கணித்திருக்கிறார். 

    சென்னையில் நடந்த இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவின் போது இயக்குனர் லிங்குசாமி அவரிடம், கார்த்தியும், நீங்களும் எப்போது ஒரு படத்தில் ஒன்றாக இணையலாம் என்று கேட்டார்.

    அதற்கு பதிலளித்தவர், சிறுவயதில்தான் வீட்டில் அமைதியான வில்லனாகவும், கார்த்தி நல்ல பையனாகவும், தந்தை சிவகுமாருக்கு மிகவும் பிடித்தவராகவும் இருந்ததாகவும் கூறினார். மேலும் பேசியவர் நெற்றியில் பட்டை போட்டுகொண்டு கார்த்தி நடிக்கும் படத்தில் நான் சைலண்ட் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறினார். 

     2019ல் வெளியான 'கைதி' படத்தில், கார்த்தி நெற்றியில் அவரது நெற்றியில் "விபூதி"யைப் பூசியிருப்பர். மேலும் கார்த்திக்கு எதிராக சூர்யா கணித்தது போல் வில்லனாக நடிக்க இப்போது அதிக வாய்ப்பு உள்ளது, அது 'கைதி 2' அல்லது 'விக்ரம் 3' இல் இருக்குமா என்பது தான் இப்போதைய பெரிய கேள்வியாக உள்ளது.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக